Apr 20, 2015

ஆயுதம் கொல்!
அன்பின் வலியதோர் ஆயுதம் ஏதுண்டு?
ஆற்றல் பெருகிநல் போற்றல் தழைக்கும்;
இன்பம் இதுவன்றோ ஞாலம் உயிர்பெறவே
ஆதலின் ஆயுதம் கொல்!

வாழ்வு சிறக்க!
சிகைதொடு வர்ணமும் சேர்ந்திட மாலையும்
கூர்நிறை வாளொடு ஆயுதம் ஏந்தினோம்;
மண்ணில் கொடுமைகள் நீங்கியென்றும் -மாதரும்
பேணிட வாழ்வு சிறந்து!
- சுரேஜமீ

No comments:

Post a Comment