எம் தாயும்; எந்தையும்; தமிழும் தந்த கொடை நான்; என் நாவிருந்து ஆட்சி செய்து, எண்ணமெல்லாம் நிறைந்து, நினைத்தபோது தங்கு தடையின்றி என் வார்த்தைகளுக்கு வளம் கொடுக்கும் தமிழே, இங்கு வருவோர் அள்ள; அள்ளக் குறையாத, தீந்தமிழ் தேன் பருகி, தென்றலில் தவழ்ந்து, எண்ணமெல்லாம் ஏற்றம் பெற்று, பாரினிலே பலர் மெச்ச வாழ்ந்திடுவர் நாளுமே! நண்பர்களே, நான் இலக்கணம் கற்றவன் அல்ல. புத்தகங்கள் படிப்பவனும் அல்ல; ஆதலால், சொற்பிழை, பொருட்பிழை இருப்பின் தயங்காமல் என்னை, மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Nov 28, 2012
புதுக்குறள் - 3
புதிதாகச் சிந்தித்தேன்...திருக்குறள் வடிவில்;
புற்றின் வகையறிந்து புறந்தள்ளின் வாழ்க்கை
தொற்றும் நோயும் வரா.
விளக்கம்:
புற்று நோயின் அறிகுறிகளை, காரணிகளை ஆராய்ந்து, அவற்றை நாம் புறம் தள்ளி வைப்போமேயானால், நம்முடைய வாழ்க்கையில் அந்நோய் வாராமல் நம்மைக் காத்துகொள்ளலாம்.
Labels:
புதுக்குறள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment