Nov 11, 2012

இனிய நல் தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

தீபம் ஒளிவிட
தீயவை விலகி
நல்லவை நாடி
எண்ணை நீராடி
கங்கையை இருப்பிடத்திற்கே
கொணர்ந்து,
குளியல் செய்து;
புத்தாடை உடுத்தி,
பகவானை வேண்டி,
பட்டாசு வெடித்து
வாழ்த்துக்கள் பரிமாறி,
வழக்கமாகக் கொண்டாடும்
இந்த நரகாசுரன் அழிந்த நாளில்;

இனியும், நம் முன் இருக்கும்,
இன்ன பல அசுரர்களாம்,
அறிவின் எதிரிகள்;
உணர்ச்சியின் உறவுகள்;

அகங்காரம்; ஆளுமை; கர்வம்;
தன் முனைப்பு; பொறாமை;
எதேச்சாதிகாரம்; எள்ளி நகையாடல்;
புறம் பேசுதல்; புண் படுத்தல்;
பெற்றோரை நிந்தித்தல்;
போன்ற அசுரர்களைக் கொன்று;

புதியதோர் உலகம் செய்து;
அகமன் மலர்ந்து;
முகமன் கூறி;
பெற்றார்; உற்றார்; ஊரார்
உலகார் மெச்சும் வகையில்;
உணர்வுகளை;
அறிவின் அடிமைகளாக்கி
சகமனிதன் வலி கண்டால்;
சகதோள்கள் கொடுத்து
சன்மார்க்க நெறி பற்றி
சகோதரத்துவம்  பேணி
இன்னுமொரு தீபாவளிக்கு
நாம் நடைபோடுவோம்
என்று உறுதியெடுப்போம்!!!!!!!!

இனிய நல்  தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

No comments:

Post a Comment