Nov 7, 2012

தமிழா ஏனிந்த தலைகுனிவு?

தென்னகம் பற்றி எரிய
யார் காரணமாயினும்,
"நாம் தமிழர்" எனும்
உணர்வற்று;
சா தீயை வைத்துச்
சடலமாக்கி விட்டனரே
சில அப்பாவி உயிர்களை!
 

உனக்கு வலை விரித்து
உன்னுள் குளிர்காய
நினைக்கும் சதியினை
அறியாயோ?
அவ்வை அன்றே சொன்னாளே
மேதினில் இட்டார் பெரியோர்;
இடாதார் இழிகுலத்தோர் என்று!

சரித்திரம் சொல்கிறது,
சக மனிதன் வலி அறியா
எவனும் தமிழனாக
இருக்கத் தகுதி அற்றவன்!

இந்நிலையில் நீ எப்படி
ஈழத்து சொந்தங்களை
காப்பாற்றுவாய்?

போதும் நிறுத்து;
உன் குருதி
இனியும்
வீணாகக் கூடாது!
சதியை முறியடித்து
சா தீயை வென்றெடு!
நாளைய சரித்திரம்
நமதே!!!!

No comments:

Post a Comment