Nov 19, 2012

லே...லே...லே...லே...

சண்முகா என்று சொன்னாலே
சந்தோஷம் தங்கும் வீட்டிலே
சஷ்டியில் விரதம் இருந்தாலே
சத்தியம் வருவான் முன்னாலே

நிந்தனை எவரும் செய்தாலே
நித்தமும் வருந்தித் தவறாலே
பக்தனாய் குமரன் பின்னாலே
பித்தனாய் போவார் முன்னாலே

கந்தனை நம்பி வந்தாலே
சிந்தனை தெளியும் தன்னாலே
எண்திசையும் எதிரிகளில்லே
ஏற்றம் வரும் கண்கள் முன்னாலே

கார்த்திகைப் பெண்கள் அருளாலே
கார்த்திகேயன் வந்தான் பிறப்பாலே
சூரனை வதைத்தான் வேலாலே
சேவலைக் கொண்டான் கொடியாலே

முருகனை வணங்கிச் சென்றாலே
முத்தமிழ் வாழ்த்தும் அவனாலே
அகத்தியன் வளர்த்த தமிழாலே
அர்ச்சனை செய்வோம் முன்னாலே

No comments:

Post a Comment