உரிமைகள் மறுக்கப்படும்போது
உணர்வுகள் மேலோங்குமென்பது
உலக நியதி!!!
ஜனநாயகம் என்பது வெறும்
ஜடனாயகம் ஆகும்போது,
அஹிம்சை என்ன செய்யும்?
அறம் துறந்தவர்கள்
ஆட்சி செய்தால்?
பல நூற்றாண்டுகள் ஆண்ட சமூகம்
அரை நூற்றாண்டுக்கும் மேல்
அறவழியில் கேட்டார்கள்;
அனுமதி எங்கள் உரிமையை என்று!
ஆண்டோர் எவரும் செவி சாய்க்கவில்லை!
அடுத்து வந்தோர்
ஆயுதம் ஏந்தினர்!
இழந்த உரிமையை
ஈன்றெடுக்க!
உரத்த குரலில்
ஊரே அலறியது!
எதிர்த்து நிற்க
ஏது துணிச்சல்?
ஐயம் அற்ற மறவன் சொன்னான்;
ஒன்று பட்டால்,
ஓங்கி ஒலிக்கும் நம் சத்தத்தில்;
ஈழம் பிறக்குமென்று!!!
தந்தை செல்வா தொடங்கி
தமயன் பிரபாகரன் வரை
உயிர்பலி கொடுத்தது தான் மிச்சம்!
உரிமையை மீட்டெடுக்கவில்லை!!!
அமெரிக்காவின் நிலையை
ஆர்பரிப்போர் இருக்கும் வரை,
ஆப்ரிக்காவுக்கு நீதி
ஆசியாவிற்கு அநீதி;
இதுதான் ஐநாவின் நியதி! - சுரேஜமீ .
No comments:
Post a Comment