Nov 11, 2012

பத்ம விபூஷன் திரு. நாராயண் மூர்த்தி அவர்களின் உரை:

பத்ம விபூஷன் திரு. நாராயண் மூர்த்தி அவர்களின் உரை:

மாதத்தில் இருபத்திரெண்டு நாட்கள்;
அயல் நாட்டில்;
எட்டு நாட்கள் என் தாய் நாட்டில்;
இதுதான் எனது இன்றைய நிலை!

இத்தகைய சூழலில்
இந்த குவைத் கன்னட கூட்டா
அமைப்பின் நிகழ்ச்சியில்
"தொழில் முனைவோர்"
என்ற தலைப்பில் பேச
அழைத்திருக்கிறார்கள்!

நண்பர்களே; குறிப்பாக இளையோரே;
தொழில் முனைவோர் எப்படி
ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும்
என்பதை நாம் உணரவேண்டும்!
தனி நபர் வருமானத்தில்;
உலகத்தில் முதல் பத்து இடத்தில்
இருக்கும் குவைத்துக்கும் கூட
இது பொருந்தும்!!

தனது "முயற்சியை",
குறிக்கோளை, தகுந்த முறையில்
செல்வம் தரும் வகையில் மாற்றி,
வேலை வாய்ப்பை உருவாக்கி,
ஏழ்மையை விரட்டுவோமேயானால்;
அதுதான், நம் வெற்றியின் அடையாளம்!

"முடியாதது" எதுவோ; அதை
"முடியும்" என மாற்றுவதே
உங்களின் முயற்சியின்
இலட்சியமாக இருக்க வேண்டும்!

ஒரு "முயற்சி" வெற்றி பெற
அடிப்படைத் தேவைகள் என்ன?

1.  நீங்கள் கூறுவது எளிமையாக இருத்தல் அவசியம்;
    கட்டுப்பாடுகள் அற்ற, தெளிவான வார்த்தைகளை
    உபயோகிக்க வேண்டும்;

     உங்கள் முயற்சி ஒரு நிறுவனத்தின்
2.  உற்பத்தி செலவை குறைப்பதாகவோ; 

3.  உற்பத்தி சுழற்சியின் நேரத்தை குறைப்பதாகவோ;

4.  சந்தையைப் பெருக்குவதாகவோ;

5.  வாடிக்கையாளரை கவருவதாகவோ;

இருத்தல் அவசியம்! 

இவை நான்குமோ;
இதில் ஏதேனும் ஒன்றோ
உங்கள் முயற்சியில்
இருந்தால்; நிச்சயம் ஒருநாள்
உங்கள் இலட்சியம் வெற்றியடையும்!

உலகில் தொண்ணூற்று ஒன்பது
சதவிகிதத்தினர்; மற்றவர்
முயற்சியை; மெருகூட்டி
வெற்றியடைவதால்; கால
ஓட்டத்தில்; அவர்களால்
நிலைக்க இயலவில்லை!

தன்னுடைய முயற்சி
வெற்றியடைந்ததால்;
General Motors; Microsoft;
Apple; Fed ex போன்ற
நிறுவனங்கள் நிலைத்து
நிற்கின்றன!

உலகின் மாற்றங்களை
உன்னிப்பாய் கவனியுங்கள்;
உலக அளவில் ஏற்பட்ட
நான்கு மாற்றங்கள் தான்;
நான் அன்று வெறும்
250 டாலரில் தொடங்கிய
நிறுவனம் இன்று
26 பில்லியன் டாலர்
நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது!

முதல் முயற்சி
தோல்வியில் முடிந்தால்
மூலையில் உட்கார்ந்து விடாமல்;
உங்கள் மூளையைத் தீட்டி
காரணம் அறியுங்கள்!

ஒன்று; நீங்கள் உங்கள் முயற்சியை
காலம் தாழ்த்த நேரலாம்!
இல்லையெனில்,
உங்களுக்கான சந்தை
வேறு நாட்டில் இருக்கலாம்!

வெற்றிக்கு இன்றியமையாத
அடுத்த தேவை;

தகுந்த நிபுணர்களை
தன்னகத்தே கொள்ளுதல்;
நிதி; மேலாண்மை;
உற்பத்தி; மனித வளம்
என்று ஒவ்வொரு துறைக்கும்;
ஏற்றவாறு; ஒருமித்த
கருத்துள்ள; நாளைய
இலட்சியத்திற்காக
இன்று தியாகம் செய்யத்
தயாரான; தகுதியான
நபர்களை உங்களுடன்
வைத்திருத்தல் அவசியம்!

இவை அனைத்தும்
இருந்தாலும்; நம்பத் தகுந்த
தலைமையாக தாங்கள் 
இருத்தல் அவசியம்!

தலைமையைப்  பற்றி
ஒன்று சொல்ல விளைகிறேன்!
அமெரிக்காவில்; பெருந்தொழில்
அதிபர்களிடையே;
நான் உரையாடும்போது
என்னிடம் சிறந்த தலைமைப் பண்பைப்
பற்றி பேசச் சொன்னார்கள்;

நான் சொன்னேன்;
நான் அறையில் நுழையும்போது;
என்னால்
ஒரு முகம் மலர்ந்த ஒரு
மகிழ்ச்சியை;
என்னை நம்பி வேலை
செய்யும் சக தொழிலாளர்களிடம்
ஏற்படுத்த முடிந்தால்;

அவர்களுக்கு என்னால்
வாழ்க்கைக்குத் தேவையான
உபரி வருமானத்தைக்
கொடுக்க முடிந்தால்;

நான் ஒரு நல்ல தலைமையாளன்!!
என்று.
 
இவை இருந்து விட்டால்;
இன்றைய காலத்தில்
உங்கள் முயற்சியை
செயல் படுத்த பணம்
உங்களை நாடி வரும்!


ஆதலால்; இளையோரே
தொழில் முனைவோரே;
இன்னல்களைப் பொருட்படுத்தாது
இலட்சியங்களை வென்றெடுக்க
உங்களுக்கு தேவை;

உங்கள் முயற்சி எதாவது ஒரு
மாற்றத்திற்கு வித்திட வேண்டும்!
அதற்கான சந்தை மற்றும் சகாக்கள்;
நல்ல தலைமைப் பண்பு;
உங்களிடம் இருத்தல் வேண்டும்!

வாருங்கள்; வெற்றி நம்
பக்கத்தில்!!!!!!
வரலாறு எழுதும் நம்
பக்கத்தை!!!!!

ஜெய் ஹிந்த்!!!

(Padma Vibooshan Sri.Narayan Murthy's speech at a function organized by Kuwait Kannada Koota on 9th November, 2012)

No comments:

Post a Comment