Nov 27, 2012

கார்த்திகை தீபம்...

கார்த்திகையின் வரவு கண்டு
கன்னியர்கள் மகிழ்ந்திடுவர்
தீபங்களை ஏற்றிடுவர்
திருநாமம் சொல்லிடுவர் .

துணை வருவோன் எவனென்று
தினம் மனமே அலைபாய ,
பெற்றோரும் நாள் பார்த்து
பெருமையுடன் தேடிடுவார் ;
உற்றதொரு காளையரை
மற்றுமொரு மகனாக ,
மாலை மாற்றிப் பெற்றிடுவர் ;
காலமெல்லாம் போற்றிடுவர்!

கார்த்திகையை வரவேற்போம்;
கன்னியர்களுடன் நாமும்,
பெற்றாரும்,உற்றாரும்,
உற்சாகமாய் வாழ வேண்டி
ஏற்றுமந்த தீபம் தனில் ,
எண்ணமெல்லாம் ஈடேற;
வாழ்த்துக்கள் சொல்லிடுவோம்
வளமுடன் வாழ்க என்று!

No comments:

Post a Comment